search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் ஊழல்"

    சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்வது எதற்காக என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RafaleDeal #RahulGandhi
    புதுடெல்லி :

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனின் 3 நாள் பிரான்ஸ் பயணத்தை, ரபேல் போர் விமானம் வாங்குவதுடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ’ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பாதுகாப்புத்துறை மந்திரி பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதற்கான காரணம் உண்மையில் மிகவும் எளிமையானது.

    பிரதமர்தான் இதில் முடிவெடுத்தார். எனவே கோர்ட்டு கேட்டுள்ள விளக்கங்களுக்கு இனிமேல்தான் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே பாதுகாப்புத்துறை மந்திரி இன்றிரவு(நேற்று இரவு) பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    நிர்மலா சீதாராமன் தனது பிரான்ஸ் பயணத்தின்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RafaleDeal #RahulGandhi
    ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புலனாய்வு பத்திரிகை முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. #RafaleDeal
    பாரிஸ் :

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகிறது. அதில் முக்கிய சர்ச்சையாக விளங்குவது அனில் அம்பானியின் தேர்வு. ரபேல் விமானங்கள் தொடர்பான வியாபாரத்தை இந்தியாவில் செய்வதற்காக பிரான்சின் டஸ்சால்ட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் பங்குதாரராக இணைந்துள்ளது.

    ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் செய்த போது ரபேல் தொழில்நுட்பங்களை பெற்று இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்திடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாஜக அரசு செய்த புதிய ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

    இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இந்த விவாகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர், ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு தான் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

    அவரது இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை முன்வைத்து ரபேல் முறைகேடு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் மேலும் வலுவான குற்றச்சாட்டுக்களை சுமத்த தொடங்கியது. ஆனால், இதற்கு பதில் அளித்த மத்திய அரசோ ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இணைந்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தது.

    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட்(Mediapart) எனும் பத்திரிகை டஸ்சால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது என மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ரபேல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் பிரான்ஸ் பத்திரிகையின் இந்த தகவல் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. #RafaleDeal
    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman
    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேச பாதுகாப்புக்காக இந்திய விமான படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜனதா அதனை மறுக்கிறது.

    எனினும், மத்திய அரசின் தலையீட்டினால் தான் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது என சமீபத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்தார். இது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

    இந்நிலையில், மூன்றுநாள் அரசு முறைப்பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஃப்ளோரன்ஸ் பார்லியை சந்தித்து பரபஸ்பரம் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அலோசிக்க உள்ளார்.

    மேலும், 2015-ம் ஆண்டு 36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்காக பிரதமர் மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அந்நாட்டு அரசுடன் நிர்மலா சீத்தாராமன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

    ரபேல் போர் விமான விவகாரத்தில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த சில வாரங்களாக அறிக்கை போர் நடந்து வரும் சூழ்நி்லையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியின் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. #RafaleDeal #NirmalaSitharaman
    ரபேல் விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தற்போது மோடியை ஆதரிக்கவில்லை என தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டார். #SharadPawar #RafaleDeal #PMModi
    மும்பை :

    ரபேல் போர் விமானம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக இடைவிடாத தாக்குதலை காங்கிரஸ் முன்னெடுத்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சமீபத்தில் ஊடகங்களிடம் பேசுகையில், ’மோடி மீது அபாண்டமாக குற்றம்சாட்டப்படுகிறது, ஒப்பந்தம் விவகாரத்தில் எந்தவிதமான ஊழலும் நடந்திருப்பதாக நினைக்கவில்லை’ என்றார்.

    2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் இருந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து வந்தது அனைவரது புருவத்தையும் உயரச்செய்துள்ளது.

    இதனையடுத்து பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து அவருக்கு பாராட்டு குவிந்தது. இதனால், அதிருப்தி அடைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர், ரபேல் விவகாரத்தில் சரத் பவாரின் கருத்துக்களோடு முற்றிலும் வேறுபடுவதால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மராத்வாடா மாகணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் சரத் பவார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை எப்போதும் நான் ஆதரிக்கவில்லை, இந்த ஒப்பந்தத்தில் விமானங்களின் விலையை அரசு ரகசியமாக வைத்திருப்பது ஏன்?, மத்திய அரசு பாராளுமன்றத்தில் ரபேல் தொடர்பான அனைத்து விவரங்களையும் விளக்க வேண்டும். இல்லையெனில் இது தொடர்பாக அரசின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்’ என அவர் தெரிவித்தார். #SharadPawar #RafaleDeal #PMModi
    ரபேல் ஒப்பந்தம் பற்றிய ரகசிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார். #RafaleDeal #RajnathSingh
    சண்டிகர் :

    பிரான்ஸ் - இந்தியா இடையிலான ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அனில் அம்பானி ஆதாயம் அடைந்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார்.

    இதற்கிடையே, இந்த ஒப்பந்தத்தின் போது ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரை செய்ததால் வேறு வழியின்றி ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹொலான்டே, சமீபத்தில் அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    அவரது பேட்டி வெளியான பிறகு இந்தியாவில் ரபேல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு அரசுக்கு எதிராக கேள்விக் கனைகளை தொடுத்து வருகின்றனர். அரசும் அவர்களுக்கு காட்டமான பதிலடி கொடுத்து வருவதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரபேல் போர் விமான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார்.

    மேலும், ரபேல் ஒப்பந்தம் தற்போதைய மோடி ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டது அல்ல, முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியின் நீட்சியே இந்த ஒப்பந்தம். மேலும், ரபேல் ஒப்பந்தம் பற்றிய ரகசிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது சாத்தியமில்லாதது.

    எனவே, மத்திய அரசின் மீது பொய்களை கட்டவிழ்த்துவிடும் எத்ரிக்கட்சிகள், மக்களை தவறாக வழிநடத்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்வதாக ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். #RafaleDeal #RajnathSingh
    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எவ்வித ஊழலும் நடந்திருப்பதாக நினைக்கவில்லை என மோடிக்கு ஆதரவாக சரத் பவார் கருத்து தெரிவித்ததன் எதிரொலியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜினாமா செய்துள்ளார். #TariqAnwar #SharadPawar #RafaleDeal
    மும்பை :

    ரபேல் போர் விமானம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக இடைவிடாத தாக்குதலை காங்கிரஸ் முன்னெடுத்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசுகையில், மோடி மீது அபாண்டமாக குற்றம்சாட்டப்படுகிறது, ஒப்பந்தம் விவகாரத்தில் எந்தவிதமான ஊழலும் நடந்திருப்பதாக நினைக்கவில்லை என்றார்.

    இதனையடுத்து பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து அவருக்கு பாராட்டு குவிந்தது. மராட்டியத்தில் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜனதாவிற்கு போதிய பலம் கிடையாது, சிவசேனாவின் உதவியுடனே ஆட்சி தொடர்கிறது. தேசியவாத காங்கிரசையும் பா.ஜனதா பகைத்துக்கொள்ளவில்லை.

    2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் இருந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து வந்தது அனைவரது புருவத்தையும் உயரச்செய்துள்ளது. இந்நகர்வை சிவசேனாவும் விமர்சனம் செய்துள்ளது.

    பிரதமர் மோடியை சரத்பவார் புகழ்ந்ததையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் அக்கட்சிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும், மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    1999-ல் சோனியா காந்தியின் வெளிநாட்டு குடியுரிமை குறித்து பேசியதால் சங்மா, சரத் பவார், தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதில் தாரீக் அன்வர் முக்கியப் பொறுப்பு வகித்துவந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார்.

    பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பலமுறை எம்.பி.யாக இருந்த தாரீக் அன்வர், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.



    இதுதொடர்பாக தாரிக் அன்வர் கூறுகையில், ’தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிவிட்டேன். கடந்த 20 ஆண்டுகளாக சரத் பவாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ரபேல் விவகாரத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்தோடு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

    ஆனால், மோடிக்கு ஆதரவாக சரத் பவார் கருத்து தெரிவித்தன் மூலம் ரபேல் விவகாரத்தில் எதிர்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாதது போன்ற தவறான தோற்றம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    சரத் பவாரின் கருத்துக்களோடு முற்றிலும் வேறுபடுவதால் கட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாத சூழலில் ராஜினாமா செய்கிறேன். மக்களிடம் ஒன்றை கூறிவிட்டு, செயல்பாடுகளில் மற்றொன்றாக இருக்கக் கூடாது’ என அவர் தெரிவித்தார். #TariqAnwar #SharadPawar #RafaleDeal
    ரபேல் போர் விமானங்களின் விலை குறித்து ஆட்சேபனை தெரிவித்த அதிகாரி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலுக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal #NirmalaSitharaman
    புதுடெல்லி :

    இந்தியாவுக்கு போர் விமானங்கள் வாங்குவது குறித்து மோடி அரசு பிரான்ஸ் நாட்டுடன் போட்டுக்கொண்ட ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அந்த குற்றச்சாட்டு வலுசேர்க்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை இணைத்தது இந்திய அரசின் வற்புறுத்தலினால்தான் என தெரிவித்ததாக வெளியான செய்தி அமைந்தது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் தொடர்ந்து மோடி அரசை காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஒரு மாத விடுமுறை அளித்துவிட்டு, ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான ஆதாரமாக ஒரு செய்தி நிறுவனத்தின் செய்தியை குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அரசை எதிர்ப்பவர்கள் குறிவைத்து நீக்கப்படுவதும், ஆதரிப்பவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், இதுகுறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    பேச்சுவார்த்தை நடத்தும்போது, அதில் ஈடுபடும் அதிகாரிகளிடையே கருத்து மாறுபாடுகள் எழுவது இயற்கைதான். சம்பந்தப்பட்ட அதிகாரியின் மாறுபட்ட கருத்து, பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்பிறகு, கூட்டு முடிவு எடுக்கப்பட்டது. மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இறுதி குறிப்பில் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டுள்ளார். அதை ஏற்றுத்தான், மந்திரிசபை கூட்டத்தில், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், அதிருப்தி தெரிவித்த அதிகாரி ராஜீவ் வர்மா, விடுமுறையில் அனுப்பப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. அது தவறான தகவல். அவர் முன்கூட்டியே திட்டமிட்டபடி, வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக சென்றார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #RahulGandhi #Modi #RafaleDeal #NirmalaSitharaman
    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், “ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்” என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #Rafale #RahulGandhi #ArunJaitley
    புதுடெல்லி:-

    ரபேல் விமான பேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், “எங்களுக்கு தேவையான நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்” என விளக்கம் அளித்திருந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், நிதி மந்திரி அருண் ஜெட்லி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது:-

    ராகுல் காந்தி மத்திய அரசு மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. 30-ம் தேதி ராகுல் ட்விட்டரில் ஒரு கருத்து தெரிவிக்கிறார். அடுத்த சில வாரங்களில் ஹாலண்டே சர்ச்சை கருத்தை வெளியிடுகிறார். இந்த இரண்டு கருத்துக்களும் நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டவை போல தோன்றுகிறது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. இரண்டும் ஒரே அலைவரிசையில் காணப்படுகின்றன. 



    ஏதோ ஒரு விதமான பழிவாங்கும் எண்ணத்தில் ராகுல் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. இந்த மொத்த குற்றச்சாட்டுகளுமே திட்டமிட்ட ஒன்றாக இருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இரு நாடுகளின் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே அலைவரிசையில் பேசுகின்றனர். 

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, தான் முன்பு கூறியதை உடனே மறுக்கிறார். அவர் இரண்டாவதாக அளித்த பேட்டியில், “ ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரான்சின் டசால்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததா என்பது எனக்கு தெரியாது. இது குறித்து டசால்ட் நிறுவனம் தான் பதில் கூற வேண்டும்” என, குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இரண்டு பேட்டிகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளன.

    ராகுல் காந்தி மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய முடியாது. ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும்

    என அருண் ஜெட்லி பேசினார்.
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார். #Rafaledeal #rahulgandhi #pmmodi #FrancoisHollande
    புதுடெல்லி :

    பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

    இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

    இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சாதமாக செயல்பட்ட ரகசியத்தை வெளியிட்டதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக,  ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். ஹலாண்டேவிற்கு நன்றி, பிரதமர் தனிப்பட்ட முறையில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை அம்பானிக்கு வழங்கியுள்ளார் என்பது இப்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிரதமர், இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார். இந்திய ராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு பிரதமர் அவமரியாதை செய்துள்ளார்.’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #Rafaledeal #rahulgandhi #pmmodi  #FrancoisHollande
    ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனம் அதன் பங்குதாரரரை தேர்வு செய்ததில் எங்களின் தலையீடு இல்லை என பிரான்ஸ் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. #Rafaledeal #rahulgandhi #pmmodi #FrancoisHollande
    பாரிஸ்:

    ரபேல் பேர ஊழலில் பிரதமர் மோடியின் நண்பருக்கு நேரடியாக 1.30 லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    ‘இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை வரும் 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக மக்கள் பணத்தில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பிரதமரின் நண்பருக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’ எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை என்று அவர் தெரிவித்தார்.

    ஹாலன்டேவின் இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டார் என ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    இந்நிலையில், தங்களின் பங்குதாரரரை தேர்வு செய்ய பிரான்சை சேர்ந்த நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே ரிலையன்ஸ் நிறுவனம், ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் பங்குதாராக தேர்வு செய்யப்பட்டதில் எங்களின் தலையீடு ஏதும் இல்லை என பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    பிரான்ஸ் நிறுவனங்களின் பங்குதாரர்களாக இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதில், தற்போது தேர்வு செய்ததில் வருங்காலங்களில் தேர்வு செய்யப்போவதில் அரசின் தலையீடு ஏதும் இல்லை.

    எனவே, தங்களுக்கு பொருத்தமானவர்களை பங்குதாரர்களாக தேர்வு செய்துகொள்ள பிரான்ஸ் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதன் பின்னர் இந்திய அரசின் ஒப்புதலுடன் இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை இந்த பங்குதாரர்களின் உதவியுடன் பிரான்ஸ் நிறுவனங்கள் செயல்படுத்தும்.

    இதன் அடிப்படையில், பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த இந்திய நிறுவனங்களுடன் ஏற்கெனவே  பல்வேறு ஒப்பந்தகளில் பிரான்ஸ் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rafaledeal #rahulgandhi #pmmodi  #FrancoisHollande
    ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி கமிஷனாக கொடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். #RafaelDeal #PrashantBhushan
    புதுடெல்லி :

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ஒரு ரபேல் விமானம் ரூ.560 கோடிக்கு வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை மாற்றி அதே விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்குவதற்கு புதிய ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தினார்கள். 

    ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து டஸ்சால்ட்-ரிலையன்ஸ் எனும் பெயரில் கூட்டாக பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. 

    எனவே, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு ரபேல் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். 

    இந்நிலையில், ரபேல் விமானம் வாங்குவதில் கற்பனைக்கு எட்டாத வகையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ரபேல் விமானம் வாங்குவதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் தேசத்தின் பாதுகாப்பில் ஆளும் பா.ஜ.க அரசு சமரசம் செய்துள்ளது. 

    ராஜீவ் காந்தி ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. ஒரு பீரங்கிக்கு 4 சதவிகிதம் கமிஷன் எனும் அடிப்படையில் அதில் ரூ.64 கோடி ஊழல் நடைபெற்றது. 

    ஆனால், ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் கற்பனைக்கு எட்டாத வகையில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் கமிஷனாக ஒரு விமானத்திற்கு 30 சதவிகதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ரபேல் கொள்முதலில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கமிஷனாக மட்டுமே ரூ.21 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. 



    முதலில் 126 விமானம் வாங்குவதாக இருந்த நிலையில், பின்னர் அதன் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டது. விமானத்துடன் அதன் தொழில்நுட்பங்களும் இந்தியாவுடன் பறிமாறிக்கொள்வதாக இருந்தது. இப்போது, தொழில்நுட்ப பறிமாற்றம் புதிய ஒப்பந்தத்தில் இருந்து மாயமாகியுள்ளது ஏன்?. இவ்விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் வைக்கும் கோரிக்கையில் நியாயம் உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #RafaelDeal #PrashantBhushan
    ×